A dialogue between two friends about a visit to a place of historical interest

★Q.13. Write a dialogue between two friends about a visit to a place of historical interest.
→Ans: A dialogue between two friends about a
visit to a place of historical interest.
Myself: Hello. Jamal, how are you?
Jamal: I am fine and you?
Myself: I am fine too. You have visited
Bagerhat during the last autumn vacation.
Jamal: Yes.
Myself: Why have you chosen Bagerhat?
Jamal: You know Bagerhat is a place of
historical interest.
Myself: What important things did you see
there?
Jamal: The Shat Gombuj Mosque, the Mazar
of Khan Jahan Ali, the tank, the Ghora Digi
etc.
Myself: How did you enjoy your visit?
Jamal: It is wonderful experience.
Myself: Thank you very much.
Jamal: You are welcome.

: A dialogue between father and son on the choice of career.

Q. 12. Write a dialogue between father and
son on choice of career.
Ans: A dialogue between father and son on
the choice of career.
Father: Hello. Dear son, how are you?
Son: Thank you father. I am fine. How are
you?
Father: I am fine too. Your examination has
already been over. You must decide about
your career.
Son: I have decided about my career. I want
to be a doctor. So, I want to get admit in
medical collage after passing S.S.C. and
H.S.C. examination.
Father: That is very good idea. I agree with
you. But I advice you to read very carefully
for the later course of study.
Son: Yes, father. I am very serious and I want
to do good result in H.S.C. examination to get
admitted in medical college.
Father: Well go ahead my boy. Allah blesses
you.
Son: Thank you father.

A dialogue between the headmaster and a student on testimonial.

Q.11. Write a dialogue between the
headmaster and a student about testimonial.
Answer : A dialogue between the headmaster
and a student on testimonial.
Student : May I come in sir.
Headmaster: Yes come in.
Student : Good morning, sir.
Headmaster: Good morning. How are you?
Student : Good morning, sir. I am fine and
you?
Headmaster: I am fine too. What do you
want?
Student: I am going to be admission in a
college.
Headmaster: It’s very good idea.
Student : So I need S.S.C testimonial and here
is my application.
Headmaster: Good, I am giving you it with
pleasure.
Student : Thank you sir. Pray for me, Sir.
Headmaster: Of course. Thank you my boy.
May Allah bless you.

A dialogue between two friends about the necessity of tree plantation

Q.10. Write a dialogue between two friends
the necessity of tree plantation.
Ans: A dialogue between two friends about
the necessity of tree plantation.
Anis: Hello Rakib, how are you?
Rakib: I am fine and you?
Anis: I am fine too. Would you like please tell
me the necessity of tree plantation?
Rakib: Trees are our best friends. They are a
great source of food and vitamins.
Anis: Is there any other use of trees?
Rakib : Trees bear a great impact on the
climate. Also trees save us from flood and
many other natural calamities.
Anis: What should we do then?
Rakib: We should plant more and more trees.
Anis: Thank you.
Rakib: Welcome.

A dialogue between a customer and a shopkeeper about to buy a fair of shoes

Q.9. Write a dialogue between you and the
sales man of the shop about to buy a fair of
shoes.
Ans: A dialogue between a customer and a
shopkeeper about to buy a fair of shoes.
Shopkeeper: Excuse me, brother.
Customer: Yes, thanks.
Shopkeeper: May I help you?
Customer: Yes.
Shopkeeper: What do you want to buy?
Customer: Thanks. I want to buy a fair of
shoes.
Shopkeeper: Please wait. I am showing you
some latest model shoes.
Customer: Oh, the shoes are so nice. How
much the fair of shoes?
Shopkeeper: Sir. This price is 800.00 Taka
only.
Customer: Please, pack it.
Shopkeeper: Of course sir.
Customer: Take your price.
Shopkeeper: Thank you sir.
Customer: Well come.

A dialogue between two friends about how to eradicate illiteracy problem from our country.

★Q.8. Write a dialogue between you and your friend about how to eradicate the illiteracy problem from our country.
→Ans: A dialogue between two friends about
how to eradicate illiteracy problem from our
country.
Myself: How are you Raza?
Raza: Fine. Thank you and how about you?
Myself: I’m fine too. Saddam, most of the
people of our country are illiterate.
Raza: Yes. Illiteracy is a curse in our country.
Myself: Illiteracy hampers all our development
programme.
Raza : Certainly.
Myself: How can we eradicate illiteracy?
Raza: We should set up adult literacy centre
at every village.
Myself: Of course.
Raza: Besides it we should encourage all
parents to send their children to school.
Myself: Of course. I think that all educated
person should come forward to eradicate this
problem.
Raza: Good idea.
Myself: Thank you.
Raza: Welcome.

A dialogue between two friends about the advantage and disadvantage of village life and city life.

★Q.7. Write a dialogue between two friends about the advantage and disadvantage of city life and village life.
→Ans: A dialogue between two friends about
the advantage and disadvantage of village life
and city life.
Korim: Hello. Rohim, how are you?
Rohim: I am fine, what about you?
Korim: I am fine too. You live in village. So, I
want to know about advantages of a village
life.
Rohim: Excellent. There are no traffic jam, air
pollution, sound pollution, road accident in a
village.
Korim: Fine. But, there are no electricity and
better educational institution. The villagers
are illiterate person.
Rohim: Though they are illiterate person, they
are not heartless like yours. They are very
simple and honest person.
Korim: You have said absolutely right. We
have many disadvantages in a city.
Rohim: I think that we should dispel these
disadvantages from our city and village. So,
both places can be a suitable residence for
us.
Korim: Thank you.
Rohim: Welcome.

A dialogue between two friends about the importance/the necessity of reading newspaper

★Q.6. Write a dialogue between two friends about the importance of reading newspaper.
→Ans : A dialogue between two friends about
the importance/the necessity of reading
newspaper
Firoz : Hello parish. Do you read any
newspaper regularly?
Parish : Yes, It’s “The Daily Sangram.”
Firoz : It’s nice. Do you think reading
newspaper regularly is essential?
Parish : Certainly. In fact, it is a storehouse of
knowledge.
Firoz : What can you learn from it?
Parish : I can learn about world trade and
commerce, politics, films, games, and
Sports etc. from it
Firoz : Now, what is your suggestion for
others?
Parish : I want to say that everybody should
read at least one newspaper daily.
Firoz : Thank you very much.
Parish : Welcome.

A dialogue between two friends about how to learn English

★Q.5. Write a dialogue between you and your friend about how to learn English/how to improve English.
→Ans: a dialogue between two friends about
how to learn English/ how to improve English.
Nasrin: Hi. Shila, how are you?
Shila: I am fine and how about you?
Nasrin: Not well.
Shila: Why?
Nasrin: I could not do well in the examination
in English. I want to improve in English.
Shila: If you want to do well in English, at first
you have to learn rules of English grammar
and enrich vocabulary.
Nasrin: I know some rules and vocabulary.
Shila: You have to read English books,
newspaper, magazine etc which will develop
your vocabulary.
Nasrin: Thanks. But I can’t speak English
well.
Shila: You must practice speaking English
with your friends.
Nasrin: Thank you for your suggestion.
Shila: Welcome.

Dialogue writing


★Q.4. Write a dialogue between you and your friend regarding your future plan after the publication of the result.
→Ans: A dialogue between two friends regarding their future pla after the publication of the result.
Sujon: Hello. Rajib, how are you?
Rajib: I am fine and what about you?
Sujon: I am fine too. You have passed S.S.C.
examination getting G.P.A.-5. Now what is you future plan.
Rajib: Yes, I want to be a doctor. After
passing the H.S.C. examination I shall admit
in medical college.
Sujon: Good idea. Your plan is absolutely
right.
Rajib: After all you have made a good result.
Now, what is your intention?
Sujon: I want to be an English teacher. After
passing the H.S.C. examination I must study
in honors and masters on English.
Rajib: Thanks. Your choice is so nice. There is
so lack of qualified teacher in our country.
Sujon: Welcome.

Dialogue writing

★Q.3. Write a dialogue between you and your headmaster on the basis of issuing a transfer
certificate.
→Ans: A dialogue between the Headmaster and a student over a transfer certificate.
Student: May I come in, sir?
Headmaster: Yes, come in.
Student: Good morning, sir.
Headmaster: Good morning. What do you want?
Student: Sir, I need a transfer certificate.
Headmaster: Why do you need transfer certificate middle of the session?
Student: You know that my father is a government employee.
Headmaster: Yes. I do.
Student: He has recently transferred Noakhali to Chittagong.
Headmaster: Where is your application?
Student: Here it is, sir.
Headmaster: I see. Now you must meet the head clerk.
Student: Thank you.
Headmaster: Welcome.

Dialogue writing

★Q.2. Write a dialogue between you and your friend about importance of learning English.

→Ans: A dialogue between a teacher and a student about the importance of learning
English/ necessity of learning English.

Student: Good morning sir, how are you?
Teacher: I am fine, how are you?
Student: I am fine too. Sir, I want to know about necessity of learning English.
Teacher: Thank you for your curiosity. We know that English is an international language and communication defends on the language.
Student: But, why shall we learn it?
Teacher: If you want to serve in a post office, in a foreign office, in an airport and to study higher education, you must know English.
Student: Now, I think that everybody should learn English. Because we can not progress in
life without learn it.
Teacher: I hope that you have understood properly it.
Student: Thank you sir, for your advices.


Prepared by
Brinda. D
B. T. Asst, English.
G. H. S, melpattampakkam.
Cuddalore dist

Dialogue Writing

Q.1. Write a dialogue between you and your friend on your preparation for the ensuing
S.S.L.C. Examination.

→Ans: A dialogue between two friends on coming/ensuing S.S.C. examination.

Ashik: Hello Alam, How are you?
Alom: Not so good. I am worried about the coming examination.
Ashik Don’t worry.
Alom: I am forgetting everything.
Ashik: What have you done about
mathematics?
Alom: I have done well in mathematics but I could not do well in English.
Ashik: Don’t be afraid. You are a good student. If you revise your lesson frequently, you will do well.
Alom: How are you getting on with your studies?
Ashik: My preparation is so good in all subjects.
Alom: Pray for me and thanks for your suggestion.
Ashik: Welcome.


Prepared by

Brinda. D
B. T. Asst, English.
G. H. S, melpattampakkam.
Cuddalore dist

இன்னொரு அனிதா உருவாகக் கூடாது! - தமிழர்கள் நாம் கைகோப்போம்... நம் குழந்தைகளின் கல்விக்காக!* *சூர்யா...*

சிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப் பிடித்துச் செல்வான், நாம் ஏமாந்துவிடக் கூடாது!’ என்று தாய்ப் புறா திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வேடன் வலையை வீசி புறாக்களைப் பிடித்துக்கொண்டுபோன கதையைப் படித்திருக்கிறோம். இப்போதைய தமிழகக் கல்விச் சூழலுக்கு அந்தக் கதை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. மாணவி அனிதாவின் உயிரைப் பறித்துச் சென்ற வேடர்கள், இன்னும் பல மாணவர்களின் எதிர்காலத்தில் தீயை வைக்கக் காத்திருக்கிறார்கள். என்ன செய்யப்போகிறோம்?

உங்களுக்குத் தெரிந்திருக்கும். எங்களுடைய ‘அகரம் ஃபவுண்டேஷன்’ கடந்த 10 ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காகத் தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்துவருகிறது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்களைச் சரிபார்த்து, நேர்காணல் நடத்தி அவர்களில் 1,943 மாணவர்கள் இப்போது பல்வேறு கல்லூரிகளில் படிக்க அது உதவிவருகிறது. இவர்களில் 49 பேர் மருத்துவ மாணவர்கள்.

இவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராமப்புறங்களிலிருந்து வருபவர்கள். 91% பேர் முதல் தலைமுறையாக பன்னிரண்டாம் வகுப்பை முடிப்பவர்கள். மாத வருமானம் ரூ. 2,000 நிரந்தரமாகக் கிடைக்காத பெற்றோர்களின் பிள்ளைகள்தான் இவர்களில் அதிகம். பதின்பருவ வளர்ச்சிக்குத் தேவையான நல்ல உணவுகூடக் கிடைக்கப் பெறாதவர்கள்.

*ஒரே நாடு... ஒரே தேர்வு - வன்முறை!*

வீட்டுச் சூழல்தான் இப்படி என்றால், கல்விச் சூழல் இதைவிட மோசமாக இருக்கும். போதிய ஆசிரியர்கள் இல்லாமல், அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தவர்கள். பெரும்பாலான மாணவர்கள் விடுமுறை நாட்களில் பகுதிநேரக் கூலி வேலைக்குச் செல்பவர்கள். இந்த அனுபவத்திலிருந்து கிடைத்த படிப்பினைகளிலிருந்தே இதை எழுதுகிறேன். நாங்கள் நடத்தும் நேர்காணலில் பங்கேற்பதற்கான பஸ் செலவுக்கான சில நூறு ரூபாய் பணம்கூட அவர்களில் பலருக்கு இயலாத காரியம். ஒவ்வொரு வருடமும் இப்படிப்பட்ட பல மாணவர்களை நான் பார்க்கிறேன்.

*லட்சக்கணக்கான ரூபாய் பணம் செலுத்தி, சிறந்த பள்ளியில் படித்து, தனிப் பயிற்சிகள் மேற்கொண்டு, நல்ல வாழ்க்கைத் தரத்தோடு இருக்கும் மாணவர்களுக்கும், இப்படி எந்த வசதி வாய்ப்பும் இல்லாத மாணவர்களுக்கும் ‘ஒரே நாடு; ஒரே தேர்வு’ என்ற பெயரில் ஒரு தேர்வை நுழைப்பது எவ்வளவு பெரிய வன்முறை! நந்தனாரை ‘நெருப்புக்குள் சென்று தூய்மை அடைந்த பிறகு கோயிலுக்குள் வா’ என்று சொன்ன அந்தக் காலத் தீண்டாமைக்கும், ‘நிறையப் பணம் செலவழித்துத் தனி கோச்சிங் எடுத்து ‘நீட்’ போன்ற பல்வேறு நுழைவுத்தேர்வில் வெற்றித் தகுதியை நிரூபித்த பிறகு கல்லூரியில் படிக்க வா!’ என்று சொல்வதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது?*

*கல்வியின் மூலம் ஏற்றத்தாழ்வு*

பாகுபாடுள்ள பள்ளிகள், பாகுபாடுள்ள கல்வி முறை, வசதிக்கேற்ற விதவிதமான பாடத்திட்டங்கள் என எல்லா நிலையிலும் பாகுபாட்டை நிறுவிவிட்டு, ஒரேவிதமான தேர்வு முறையில் வெற்றி பெற வேண்டும் என்று சொல்வது நாகரிக சமுதாயம் செய்கிற வேலை இல்லை. வளர்ந்த நாடுகள் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைக் கல்வியின் மூலம் உருவாக்கிக்கொண்டிருக்கும்போது, இந்தியாவில் கல்வியின் மூலமே ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அதிகமாக்கிக்கொண்டிருக்கிறோம். தீண்டாமையின் புதிய வடிவமாக, ‘தரமான கல்வி, தகுதியான மாணவர்கள்’ என்கிற முழக்கம் முன்வைக்கப்படுகிறது. பொதுப்புத்தியில் இப்போது அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும் தரமற்றவையாகிக்கொண்டே வருகின்றன. ‘காசு கொடுத்தால்தான் இங்கே தரமான கல்வி கிடைக்கும்’ என்று மக்களை நம்பவைத்து, தாலியையும், சோறு போடும் மண்ணையும் விற்றுக் கல்விக் கட்டணம் கட்ட வைக்கிறார்கள். அனைவருக்கும் பொதுவான, தரமான இலவசக் கல்வியை வழங்க வேண்டிய அரசாங்கம், தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு, தகுதிப்படுத்துகிற நுழைவுத் தேர்வுகளை நடத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது?

*இனி நாம் என்ன செய்ய வேண்டும்?*

இந்த ‘நீட்’ தேர்வு மட்டுமே நமது கல்வி முறையின் ஒற்றைப் பிரச்சினை இல்லை. பல்வேறு குறைபாடுகள் கொண்ட நம் கல்விமுறையின் சமீபத்திய பலி அனிதா என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நம் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ அனிதாக்கள் இருக்கிறார்கள். 2017 ஜனவரி மாதம் அகரம் ஃபவுண்டேஷன் சார்பாக ‘நீட்’ தேர்வு பற்றிக் கல்வியாளர், பேராசிரியர் பிரபா கல்விமணி (பேராசிரியர் கல்யாணி) தொகுத்த புத்தகத்தை அகரம் ஃபவுண்டேஷன் வெளியிட்டது. ‘நீட்’ பற்றியும் தமிழகக் கல்விச் சூழல் பற்றியும் அவசரமாக விவாதிக்க வேண்டிய விஷயங்களைக் குறிப்பிட்டுத் தமிழகக் கல்வியாளர்களின் கருத்துக்களைத் தொகுத்து அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.

கல்வியாளர்கள் மத்தியில் கவனம் பெற்ற நூலின் கருத்துகள், முடிவு எடுக்க வேண்டியவர்களிடம் கவனம் பெறவில்லை. மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே சேர்ந்து லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக மாற்றிவிட்டன. பொறுப்பிலுள்ளவர்களின் தவறுகளுக்கு, அப்பாவி மாணவர்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள்.

*இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கியமான கேள்வி.*

அனைவருக்கும் சமமான கல்வி

ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணம் படைத்தவர்களுக்கு ஒரு கல்வி. பிறகு, இருவருக்கும் ஒரே தேர்வு என்பதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்.

காலத்துக்கேற்ற பாடத்திட்டம், திறமையான ஆசிரியர்கள், அனைவருக்கும் பொதுவான அடிப்படை வசதிகள் கொண்ட பள்ளிகளை உருவாக்க அரசாங்கத்தை வலியுறுத்தி, நடை முறைப்படுத்த வேண்டும். வளர்ந்த நாடுகள் அனைத்திலும், ‘பொதுப் பள்ளி’ முறைதான் நடைமுறையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் தேர்தலில் இதை உறுதிப் படுத்துவோருக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.

*அதிகார மையங்களைக் கட்டுப்படுத்துவோம்*

நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டுவரும். மாநில அரசு ‘நுழைவுத் தேர்வு இல்லை’ என்று அறிவிக்கும். நீதி மன்றங்கள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொள்ளாமல், மத்திய - மாநில அரசுகளின் நிலைப்பாட்டை வைத்துத் தீர்ப்புகள் எழுதும். சொந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்போதுகூட எவ்விதமான எதிர்வினையும் ஆற்றாமல் மக்கள் இருப்பார்கள். இந்த நிலை நீடித்தால் எந்த மாற்றமும் வராது. மாணவர்கள் நலனைப் பாதிக்கும் எந்தச் செயலையும் எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும். மக்கள் எதிர்ப்பு மட்டுமே இந்த அதிகார மையங்களைக் கட்டுப்படுத்தும்.

*கல்வி மாநில உரிமை*

இந்தியா என்பது ஒரே தேசம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஒரே மொழி, ஒரே இனம், ஒரே பண்பாடு என்று சுருக்கிவிட முடியாது. கல்வி என்பதை மாநிலங்களின் உரிமைக்கு உட்பட்ட அதிகாரமாக மாற வேண்டும். ஒரு மாநிலத்தின் தனித்துவமான கல்விப் பிரச்சினைகளை, அதைப் புரிந்துகொள்ள இயலாத பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. கல்வி முழுக்க முழுக்க மாநில உரிமை என்பது மீண்டும் அரசியலமைப்புச் சட்டப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

*நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை*

தாய்மொழி வழிக் கல்விதான் சிறந்த கல்வி என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. வசதி வாய்ப்பற்ற பெரும்பான்மையான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயில்கிறார்கள். உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே என்பது அநீதியானது. ஆங்கிலம், இந்தி தவிர அந்தந்த மாநில மொழிகளிலும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

*நவீனத் தீண்டாமை*

‘தரம், தகுதி’ போன்ற வார்த்தைகள் நவீன தீண்டாமையாக மாறிவருகின்றன. மாணவர்கள் அவர்களுடைய சூழ்நிலையில் சிறந்து விளங்க இரவு பகலாக உழைக்கிறார்கள். தரமான, தகுதியான மாணவர்களை உருவாக்க வேண்டிய அரசாங்கத்தின் பொறுப்பு. பல ஆண்டுகளாகப் பொறுப்பற்ற அரசுகளின் தவறுகளுக்கு மாணவர்களைப் பலி ஆக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியது. அரசுப் பள்ளி மாணவர்கள் போதிய வசதி வாய்ப்புகள் இன்றி தரமற்ற கல்வியைப் பெறுகிறார்கள் என்றால், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பணத்தைக் கொட்டிக்கொடுத்து, தரமற்ற மனப்பாடக் கல்வியைப் பெறுகிறார்கள். இதில் எங்குமே தரமோ தகுதியோ இல்லை.

*அடிமடியில் கை வைக்கும் வேலை*

கல்வியில் சீர்கேடு என்பது அடிமடியில் கைவைக்கிற வேலை. அரசுப் பொறுப்பில் இருக்கிறவர்கள் லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடினால், கடுமையாக தண்டிப்பதற்கான விசேஷச் சட்டங்களை உருவாக்க வேண்டும். கல்வி ஒன்றுதான் கடைக்கோடி மனிதனையும் முன்னேற்றும் ஏணி என்று நம்பிக்கொண்டிருந்தோம். அந்த ஏணியை வைத்து உயரத்துக்குச் செல்லாமல், கீழே இறங்குவது அறிவுபூர்வமான செயல் அல்ல. ‘நீட் தேர்வு’ பற்றி மட்டும் விவாதிப்பதும், அதற்கென்று தனியாகப் போராடுவதும் முழுமை பெறாத முயற்சிகள் என்பதை இனியாவது புரிந்துகொள்வோம். நீட் தேர்வும், அது தொடர்பான பிரச்சினைகளும் நம் மோசமான கல்விச் சூழலின் கோரமான ஒரு பகுதி மட்டுமே.

*குருடாக்கப்படும் எதிர்காலம்*

இனிமேலாவது கல்வி தொடர்பான அனைத்துப் பிரச்சினை களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கப் பழகுவோம். ஈடு செய்ய முடியாத அனிதாவின் மரணத்துக்கு அர்த்தம் சேர்க்கிற வகையில், இந்தச் சூழலை ஒட்டுமொத்தக் கல்விப் பிரச்சினைகளைத் தொகுத்துப் பார்க்கும் தொடக்கப்புள்ளியாகக் கருதுவோம். இதைக் கவனிக்கத் தவறினால் சமூக நீதிக்குப் போராடிய பெரியாரும், ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த காமராஜரும் வாழ்ந்த மண்ணில், இனி வரும் தலைமுறையினருக்குக் கல்வியின் பெயராலேயே சமூகநீதி மறுக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் குருடாக்கப்படும்.

இந்தப் பரிந்துரைகள் முழுமை பெற்றதாகக் கருதவில்லை. தமிழகத்தில் சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் முன்வைக்கும் பரிந்துரைகளை விவாதித்து ஏற்றுக்கொண்ட பிறகு, நாம் அனைவரும் இணைந்து அந்தப் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரத் தொடர்ந்து போராட வேண்டும். காமராஜரைப் போல ஏழை எளிய மக்களின் கல்வி நலனை அக்கறையோடு பார்ப்பவர்களே இனி ஆட்சியாளர்களாக வர முடியும் என்பதை நாம் உண்மையாக்க வேண்டும். அதுவே நிரந்தரத் தீர்வுகளையும், அனிதா போன்ற அப்பாவிக் குழந்தைகளையும் காப்பாற்றும். இது மாணவர்களின் உரிமை. அதைப் பெற்றுத் தரவேண்டியது நமது கடமை.

இன்றுவரை இந்தியாவின் பிற மாநிலங்களுக்குத் தமிழகம் சமூகநீதிக்கான போராட்டங்களில் முன்னுதாரணமாக விளங்குகிறது. அந்தத் தனித்துவத்தை நாம் இழந்துவிடக் கூடாது.

*- சூர்யா, திரைப்பட நடிகர், அகரம் ஃபவுண்டேஷன் நிறுவனர்.*

தினம் ஒரு குட்டிக்கதை

"நீண்ட தொலைவில்இருந்து இரண்டுகுடம் தண்ணீர் எடுத்துவந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்துவிட்டு, அடுத்த இரண்டுகுடம் தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி........

"அந்தநேரம் அவளின் கணவன் மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெயில். பசிவேறு அவனுக்கு.

"வெயிலில் வந்த்தால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் தட்டிவிட்டு விழுந்துவிடுகிறான். இரண்டுகுடம் தண்ணீரும் கொட்டிவிடுகிறது.

அவனுக்கு கடுமையான கோபம் வந்துவிடுகிறது. கொஞ்சமாவது அறிவுவேனாம்? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னும் இரண்டு குடத்தோடு வருகிறாள் மனைவி.

" தூக்கிவந்த குடத்தைக்கூட இறக்கவிடாமல் அவளைத்திட்டுகிறான். "உன்னையெல்லாம் உங்கவீட்டில எப்படித்தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்றபடி கண்டபடி திட்டுகிறான்.

இதைக்கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. " நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டு வற்றேன் தெரியுமா?

கண்ணை எங்க வச்சுக்கிட்டு போனிங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி வார்த்தை பெரிதாகி, அவன் அவளை அறைந்துவிடுகிறான்.

"உடனே அவள் 'இனி ஒரு நிமிஷம்கூட உன்கூட வாழமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளின் அம்மாவீட்டுக்கு சென்றுவிடுகிறாள்......

இது கணவன், மனைவிக்குள் ஒருசின்ன பிரட்சனை எவ்வளவு பெரிய முடிவைஎடுக்கவைத்துவிட்டது என்பதைக்கூறும் கதை.

இந்தக்கதையின் முடிவு இப்படிஇருத்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்ப்போம்.........

அவன் குடம்தடுக்கி விழுந்து, தண்ணீரை கொட்டிவிட்டான். உடனே அவனுக்கு தோன்றியது " அடடா இப்படி கவனிக்காமல் இரண்டுகுட தண்ணீரையும் கொட்டிவிட்டோமே!

"சே! பாவம் அவள். தண்ணீர் எவ்வளவு தூரத்தில்இருந்து கொண்டுவருகிறாள்? முதல்வேலையா அவள்வந்தவுடன் மன்னிப்புகேட்டுவிட்டு நாமேபோய் இரண்டுகுடம் தண்ணீர் எடுத்து கொடுக்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும்போது அவள் தண்ணீரோடு வருகிறாள்.

இவன் ஓடிப்போய் அந்தக்குடங்களை இறக்கியவாறு நடந்ததைச்சொல்லி, "நான் கவனிக்காமல் குடத்தின்மேல் விழுந்து தண்ணீரைக்கொட்டிவிட்டேன். நீ எவ்வளவுதூரத்தில்இருந்து இந்த தண்ணீரைக்கொண்டுவருகிறாயஎன்னை மன்னித்துவிடு. கொடு நான்போய் தண்ணீர் கொண்டுவருகிறேன் என்கிறான்.

உடனே அவள் பதறுகிறாள். " ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர்போனா போகட்டுங்க. நீங்க என்ன வேனும்னா கொட்டிவிட்டீங்க! தெரியாமத்தானே! அங்க தண்ணியவச்சது என்தப்பு. நான் போய் எடுத்துக்கொள்கிறேன்.

நீங்க வாங்க சாப்பிட. நல்ல பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்கிறாள்.(அவள் திட்டியிருந்தால்கூட இவ்வளவு தண்டனை கிடைத்திருக்காது அவனுக்கு).

அவன் அப்படியே நெகிழ்ந்துபோகிறான். அவள்மேல் அவனுக்கு இன்னும் அளவுகடந்த பாசம் உண்டாகிறது உள்ளுக்குள்.

இவ்வளவுதான் நம் வாழ்க்கையும்!கணவனோ, மனைவியோ தெரிந்து யாரும் தப்பு செய்வதில்லை. இருவரில் ஒருவர் ஒருபடிஇறங்கினால், மற்றவர் கண்டிப்பாக பத்துப்படி இறங்கிவருவார்.

நம்மைப்பார்த்துதான் நம்பிள்ளைகள் வளர வேண்டும்.........

*புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை*

*தினமணியின் தலையங்கம்...* *ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?*

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.

தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?

இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?

அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.

மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?

மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.

தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?

ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.

அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.

திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன் கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.

ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.

*நன்றி : தினமணி*