சுஜாதாவை தவிர வேறு யார் இப்படிஎழுத முடியும்

அந்த காலம் தான்
நன்றாக இருந்தது....!
**************
ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே
சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு
*****************
பேருந்துக்குள் கொண்டுவந்து
மாலைமுரசு விற்பார்கள் .,
*****************
மிதி வண்டி வைத்திருந்தோம்.,
*******************
எம் ஜி ஆர் உயிரோடு
இருந்தார்.
******************
ரஜினி, கமல் படம் ரிலிஸ்.

KB படங்கள் என்றால்
ஒரு மாதம்அலசுவோம்
***********
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.
********************
கல்யாண வீடுகளில்
பாய் போட்டு சாப்பாடு
*************
கபில் தேவின்
கிரிக்கெட். FANTASTIC
5 நாள் MATCH
********************
குமுதம், விகடன்
நேர்மையாக இருந்தது.
***************
எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும்,
கேசட்டிலும் பாடல் கேட்பது
சுகமானது
********************
வீடுகளின் முன் பெண்கள்
காலையில் கோலமிட்டார்கள்,
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன்
அரட்டை அடிப்பார்கள்
*****************
சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு
முன்பே திட்டமிடுவோம்
**********************
தீபாவளி பண்டிகையை கொண்டாட
ஒரு மாதத்துக்கு முன்பே  தயாராவோம்
*************
புது SCHOOL UNIFORM தான்
சிலருக்கு DEEPAWALI DRESS
***********
டான்ஸில் ஆபரேஷன்தான்
பெரிய ஆபரேஷன்
நிறைய பேர்
பண்ணி கொண்டார்கள்
***************
வானொலி நாடகங்களை
ரசித்து கேட்டோம்.,
******************
/எல்லோரும் அரசு பள்ளிகளில்
படித்தோம்.,
***************
சாலையில் எப்போதாவது
வண்டி வரும்.,
***************
மழை நின்று
நிதானமாக பொழியும்
*************
தமிழ் ஆசிரியர்கள்
தன்நிகரற்று விளங்கினர்.,
*******************
வேலைக்கு போகாதவன்
எந்த குடும்பத்திற்க்கும்
பாரமாயில்லை.,
*******************
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,
*****************
வெஸ்ட் இன்டீசை
வெல்லவே முடியாது.,
*******************
சந்தைக்கு போக
பத்து ரூபாய் போதும்.,
***************
அம்மா பக்கத்தில் உறங்கினோம்
*******************
கொளுத்தும் வெயிலில்
செருப்பு இல்லாமல் நடந்தோம்
****************
முடி வெட்ட
இரண்டு ரூபாய்தான்.,
Shaving 50 பைசா
-------------------
பருவ பெண்கள் பாவாடை
தாவணி உடுத்தினர்………
,சிலிண்டர் மூடுதுணி போல்
யாரும் நைட்டி அணிய வில்லை.,
**************
சுவாசிக்க காற்று இருந்தது.,
குடிதண்ணீரை யாரும்
விலைக்கு வாங்க வில்லை.,
****************
தெருவில் சிறுமிகள்
பல்லாங்குழி ஆடுவார்கள்.
அவர்களை கலாய்த்துகொண்டே
நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,
***************
டாக்டர் வீட்டுக்கே வருவார்
****************
காதலிப்பது த்ரில்லிங்கா  இருந்தது
*************
சினிமா பாட்டு புத்தகம் கிடைக்கும்

*************
மயில் இறகுகள்
குட்டி போட்டன...புத்தகத்தில்.,
**************
ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு
அப்பாவிடம் அடி வாங்கி்னோம்..,
*************
மூன்றாம் வகுப்பிலிருந்து
மட்டுமே,ஆங்கிலம்.,
**********
ஐந்தாம் வகுப்பு வரை
அரைக்கால் டவுசர்.,
************
மொத்தத்தில் மரியாதை இருந்தது..
***************
தொலைந்து போனவை
நம் நாட்கள் மட்டுமல்ல.,
நம் சுகங்களும்தான்..,
*******************

கற்றதும் பெற்றதும்

No comments:

Post a Comment